விஜய் தேவரகொண்டா மற்றும்
சமந்தா
நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா புதிய படத்திற்காககூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்குகிறார்.
இராணுவ பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் கதைக்களம் என்று கூறப்படுகிறது.விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடி சேர இருப்பதாக செய்திகள் வெளியான உடனே படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Dhanush:மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் வீடியோவால் பரபரப்பு
படத்தின் கதை இருவருக்கும் பிடித்திருந்ததால் உடனடியாக இருவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
மைத்ரி
மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு
அனிருத் ரவிச்சந்தர்
இசையமைக்கிறார்.
தற்போது இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் பூஜை வரும் ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 23-ம் தேதி காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமந்தா தற்போது ‘
சகுந்தலம்
‘ படத்தில் நடித்து வருகிறார். யசோதா என்ற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்
லைகர்
படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மகாநதி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் சிறிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!