உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பால் உற்பத்தி செய்வதாக தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே உள்ளதாகவும், கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றார்.
மேலும், கோதுமை மற்றும் அரிசியின் உற்பத்தி கூட 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிகராக இல்லை என கூறிய பிரதமர், சிறு விவசாயிகள் தான் இத்துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக உள்ளதாக குறிப்பிட்டார்.