எப்பவும் இப்படியே இருங்க: திடீரென ஐஸ்வர்யாவை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!

தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா, அண்மையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலானது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சமப்ந்தமான வேளைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அதே போல் தனுஷும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய செல்பி போட்டோவை பகிர்ந்து நோ பில்டர் என கேப்சன் கொடுத்துள்ளார். அவரின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் பியூட்டி, எப்பவும் இப்படியே பாசிட்டிவ்வா இருங்க என பாராட்டி தள்ளி வருகின்றனர்.

‘தலைவர் 169’ படத்திற்காக தூது போன அனிருத்: மனம் மாறிய ரஜினி..!

தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி என பிசியாக உள்ளார். ஐஸ்வர்யா தற்போது எந்த பதிவுகள் பகிர்ந்தாலும் அதனை நெட்டிசன்கள் விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.