பிரிட்டன் பிரதமர் போரிஸ் இந்தியா வந்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : 2 நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ( 21ம் தேதி) இந்தியா வந்தார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காந்தி ஆசிரமம் சென்று பார்வையிடுதல் மற்றும் தொழில் தொடர்பான ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகள் பயணதிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இரண்டு முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.

latest tamil news

தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று இந்தியா வந்தார். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் வந்திறங்கிய அவருக்கு உயர் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய பேச்சு நடக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன், ரஷ்ய போர் நடந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.