மன்னிப்பு கேட்டார் நடிகர் அக் ஷய் குமார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை : பான் மசாலா புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ‘பாலிவுட்’ நடிகர் அக் ஷய் குமார் (54), அதிலிருந்து விலகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஷபிரபல ஹிந்தி நடிகர் அக் ஷய் குமார்,’ஆக் ஷன்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ரஜினி நடித்த, எந்திரன் – 2 படத்தில் நடித்தார். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை உடையவர். ‘உடல் நலத்தை கெடுக்கும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என, சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அக் ஷய் குமார் சமீபத்தில் பான் மசாலா விளம்பரத்தில் நடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர்; அவரது பழைய பேட்டியையும் பகிர்ந்தனர்.

latest tamil news

இதையடுத்து, அக் ஷய் குமார் வெளியிட்ட அறிக்கை: என் ரசிகர்கள், நலன் விரும்பிகளிடம் மன்னிப்பு கோருகிறேன். கடந்த சில நாட்களாக நீங்கள் தெரிவித்து வரும் கருத்து, என்னை கடுமையாக பாதித்துள்ளது. அதனால், பான் மசாலா விளம்பரத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அந்த விளம்பரத்தில் கிடைத்த வருமானத்தை நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளேன்.

உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இனி எப்போதும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, எதிர்ப்பு கிளம்பிய பின், அந்த தொகையை திருப்பி அளித்துவிட்டு விலகினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.