மரியுபோலை விட்டு வெளியேற முடியாமல் 1.2 லட்சம் மக்கள் தவிப்பு – ஜெலன்ஸ்கி

ரஷ்யப் படைகள் கைப்பற்றிய மரியுபோல் நகரில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரை ரஷ்யப் படைகள் பெரும்பான்மையாக கைப்பற்றினாலும், சில பகுதிகள் இன்னும் உக்ரைன் ராணுவத்தின் வசம் உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அசோவ்ஸ்டல் எஃகு தொழிற்சாலையின் கட்டுப்பாடு இன்னும் உக்ரைன் வீரர்கள் வசம் உள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.

இதனிடையே உக்ரைனுக்கு கூடுதலாக 686 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. ஸ்பெயினும் தன் பங்குக்கு ராணுவ உதவி வழங்குவதாக கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.