டெல்லி வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உக்ரைன் போர் விவகாரம், இருதரப்பு வர்த்தகம் உறவுகள், இந்தியர்களுக்கு பிரிட்டனில் கூடுதலான பணி விசாக்கள் அளிப்பது, இந்தோ பசிபிக் வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற உள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவின் மீது மேற்கத்தியா நாடுகள் கடும் எதிர்ப்புக்காட்டி வரும் நிலையில் இந்தியாவின் சுதந்திரமான நிலைப்பாடு குறித்தும் மோடியின் விளக்கத்தை போரிஸ் ஜான்சன் இடைமறித்தல் இல்லாமல் கேட்டுக் கொள்வார்.

நேற்று அகமதாபாத் வந்த பிரிட்டன் பிரதமர் இரவு டெல்லி வந்து சேர்ந்தார் .அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு அதிகாரிகள் வரவேற்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.