மதமே முக்கியம் – தேர்வை புறம் தள்ளிய இஸ்லாமிய மாணவிகள்.!

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து அன்பே முஸ்லிம் மாணவிகளை  நிர்வாகம் அனுமதிக்கவில்லை. காவி துண்டு அணிந்து வந்த இந்து மாணவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

இதனையடுத்து, இன்று முதல் +2 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டன. ஆலியா ஆசாதி, ரேஷன் ஆகிய 2 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள் தேர்வை புறக்கணித்தனர்.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவிகளில் ஒருவரான ஆலியா ஆஸாதி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“வருகின்ற ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. எங்களது எதிர்காலம் பாழாகாமல் தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் கர்நாடக முதல்வருக்கு வாய்ப்பிருக்கிறது.

நாங்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்கலாம். இந்த நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என்று ஆலியா ஆஸாதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.