இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும் ரைசினா மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

டெல்லி: இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும் ரைசினா மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும்  ரைசினா மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதுடெல்லியில் இன்று தொடங்க உள்ள  ‘ரைசினா மாநாட்டின்’ தலைமை விருந்தினராக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும் இந்த சர்வதேச உரையாடலில், புவிசார் அரசியல் மற்றும்  பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் 25-27 வரயிலான 3 நாட்களுக்கு இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சர்வதேச கூட்டரங்கு, உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உறுதிபூண்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் இந்தியாவால் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டின் 7-வது பதிப்பு இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்க முதன்முறையாக போலாந்து  வெளியுறவு மந்திரி ஸ்பிக்நியூ ராவ் இந்தியா வந்துள்ளார்.கடந்த 9 ஆண்டுகளில் போலாந்து  வெளியுறவு மந்திரி ஒருவர் இந்தியா வருவது இதுவே முதன்முறையாகும். பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த மாநாட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.