கட்டுமானப் பணியின்போது கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விபத்து – 5 பேர் மீட்பு!

டெல்லியில் இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரைத் தீயணைப்புப் படையினரும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் உயிருடன் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு டெல்லியில் சத்யா நிகேதன் என்னுமிடத்தில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது மேல் தளம் திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து 6 வாகனங்களில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மோப்ப நாய்களுடன் வந்தனர்.

கேஸ் வெல்டிங் கருவிகளின் உதவியுடன் இரும்புக் கம்பிகளை வெட்டி எடுத்து, இடிந்து விழுந்த தளத்தில் துளை போட்டனர்.

இலேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேரையும் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.