திருவண்ணாமலையில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் அடுத்த ஆரஞ்சி கிராமத்தில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகளை ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தினர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆரஞ்சி கிராமத்தில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டிருந்தனர்.

ஆய்வில் இது தெரியவந்த சூழலில் ஆட்சியர் உத்தரவின் பேரில் கீழ்பெண்ணாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.