பூஸ்டர் டோஸ் கட்டாயம் பெங்களூரு மாநகராட்சி திட்டம்| Dinamalar

பெங்களூரு:கொரோனா நான்காவது அலை பீதி ஏற்பட்டுள்ளதால், பூஸ்டர் டோஸ் பெறுவதை கட்டாயமாக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் போது, தடுப்பூசி பெற மையங்களின் முன்பாக, மக்கள் குவிந்தனர். இதனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. நான்காவது அலை வருமென, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த பூஸ்டர் பெற, மத்திய அரசு அனுமதிஅளித்தது.இதன்படி கர்நாடக அரசு, பூஸ்டர் டோஸ் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், மக்கள் இதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.பெங்களூரில் தற்போது, கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது. எனவே பூஸ்டர் பெறும்படி, மாநகராட்சி அறிவுறுத்தியது. மக்கள் பொருட்படுத்தாததால், இதனை கட்டாயமாக்க மாநகராட்சி தயாராகிறது. நான்காவது அலை தீவிரமடையும் முன், தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் அளிப்பது, மாநகராட்சியின் நோக்கமாகும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.