பெங்களூரு:கொரோனா நான்காவது அலை பீதி ஏற்பட்டுள்ளதால், பூஸ்டர் டோஸ் பெறுவதை கட்டாயமாக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் போது, தடுப்பூசி பெற மையங்களின் முன்பாக, மக்கள் குவிந்தனர். இதனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. நான்காவது அலை வருமென, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த பூஸ்டர் பெற, மத்திய அரசு அனுமதிஅளித்தது.இதன்படி கர்நாடக அரசு, பூஸ்டர் டோஸ் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், மக்கள் இதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.பெங்களூரில் தற்போது, கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது. எனவே பூஸ்டர் பெறும்படி, மாநகராட்சி அறிவுறுத்தியது. மக்கள் பொருட்படுத்தாததால், இதனை கட்டாயமாக்க மாநகராட்சி தயாராகிறது. நான்காவது அலை தீவிரமடையும் முன், தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் அளிப்பது, மாநகராட்சியின் நோக்கமாகும்.
பெங்களூரு:கொரோனா நான்காவது அலை பீதி ஏற்பட்டுள்ளதால், பூஸ்டர் டோஸ் பெறுவதை கட்டாயமாக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் போது, தடுப்பூசி பெற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.