விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து பாராட்டிய உதயண்ணா: காரணம் இதுதான்..!

நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும்
விக்னேஷ் சிவன்
இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு
விஜய் சேதுபதி
, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு ‘
காத்து வாக்குல ரெண்டு காதல்
‘ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. கண்மணியாக வரும் நயன்தாரா மற்றும் கதிஜாவாக வரும் சமந்தா இருவரையும் காதலிக்கும் ரெம்போவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு: ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்நிலையில் வெளியீட்டிற்கு முன்பாகவே ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை கண்டு ரசித்துள்ளார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் வெளியான ரொமாண்டிக் காமெடி படங்களில் இந்தப்படம் வேறலேவலில் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளாராம்
உதயநிதி ஸ்டாலின்
.

இந்தப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் படத்தின் தியேட்டர் ரீலிஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேடையில் விசிலடித்து அசத்திய விஜய் சேதுபதி பட நடிகை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.