வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

குமரி, நெல்லை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கணித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.