அமலாக்க இயக்குனரகத்திற்கு சீல் வைப்பு| Dinamalar

புதுடில்லி,-டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள லோக்நாயக் பவனில் இரண்டு மாடிகளில் அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறருது.

விமான கொள்முதல் மோசடி வழக்கை விசாரிக்கும் சிறப்பு இயக்குனர் உட்பட, அமலாக்கத்துறை ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இவர்களில், 10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் முதல், 48 மணி நேரத்திற்கு அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் ‘சீல்’ வைக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.