ஜெர்மன் எரிசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அழைப்பு

ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய உகந்த இடமாக விளங்கும் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.கிரீன் ஹைட்ரஜன், கிரீன் அமோனியா, மற்றும் பேட்டரி சேமிப்பில் சொந்த தேவையையும், உலகத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உள்ளதாக அமைச்சர் கூறினார்.

கடல் காற்றில் இருந்து 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதிக திறன் கொண்ட 50ஆயிரம் மெகாவாட் சூரிய மின்கலங்கள் உற்பத்தியில் பங்குபெற ஜெர்மனி நிறுவனங்களுக்கு அமைச்சர் ஆர்.கே. சிங் அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனிக்கு தேவயான கிரீன் ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யுமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் ஜெர்மனி பயணத்தில் ஒரு பகுதியாக அமைச்சர் ஆர்.கே.சிங், ஜெர்மனி அமைச்சர் இந்தியா -ஜெர்மன் இடையிலான கிரீன் ஹைட்ரஜன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.