இலங்கையில் பொது மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.
தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.