சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது.!

சேலத்தில் விலை உயர்ந்த வளர்ப்பு நாய்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் திருடுபோனதாக போலீசில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்லப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் அதிகளவிலான விலையுயர்ந்த நாய்கள் வளர்க்கப்பட்டு வருவதாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் அந்த ஊரில் சோதனை மேற்கொண்ட போலீசார்  நவீன், சண்முகவேல் ஆகிய 2 இளைஞர்கள் விலையுயர்ந்த வளர்ப்பு நாய்களை திருடிச்சென்று தங்கள் பண்ணைகளில் உள்ள நாய்களுடன் இணை சேர்க்கவிட்டு குட்டிகளை ஈன்றச்செய்து விற்று வருவதை கண்டுபிடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.