வெளிநாட்டில் சிகிச்சை: டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிலம்பரசன் அறிக்கை…

சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்டவதானி டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன்  அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் டி.ஆரின் வயிற்றில் ரத்தக்கசிவு உள்ளதால் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றனர். மேலும், அவர்  மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவு சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் டி. ராஜேந்தர் உடல்நிலைக் குறித்து அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.