கொழும்பில் ஹெரோயின்: இருவர் கைது!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (02), 3.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இன்று(3) மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் பேலியகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயினுடன் 42 வயதுடைய இன்னொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.