லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் மலப்புறத்தில் அதிவேகத்தில் சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொண்டோட்டி – முறையூர் சாலையில் அதிகாலையில் ,அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையோரம் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் சிறிது தூரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலப்புரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.