கிரிவல பாதையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரால் பரபரப்பு..!

கஞ்சா போதையில் இளைஞர் ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சுமார் 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சாதுக்கள் மற்றும் மக்களிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரனை நடத்திய போது அவர் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது. ஆந்திராவை சேர்ந்த அந்த வாலிபர் போதையில் இருந்ததால் அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் போதையில் இருந்ததா அவரை அப்படியே விட்டு சென்றனர்.

அந்த வாலிபர் நீண்ட நேரமாக அந்த பகுதியில் நின்று ரகளையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிரிவல பாதையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.