தேன் மிட்டாய், எள்ளு மிட்டாய்களுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு..

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டன் ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இனிப்புகளை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை யானை மூலம் ஆசிர்வாதம் செய்து மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர்..

தேனி மாவட்டம் பாலாறு பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில், மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி, சந்தனம் குங்குமம் வைத்து வரவேற்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.