இனி இரண்டாவது திருமணம் செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது திருமண நிலை குறித்து தெரிவிக்கவும், தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணத்திற்கு தகுதி பெறவும் மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடும் எந்தப் பணியாளரும் முதலில் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ விவாகரத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

பணியாளரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது மனைவி அல்லது கணவனுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும்.

இதற்கிடையில், அரசு ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்து பணியின் போது இறந்தால், அவரது இரண்டாவது மனைவி/கணவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்காது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கே மாநில அரசு முன்னுரிமை அளிக்கும்.

அனைத்துப் பிரிவு ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டுகள், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), டிஜிபி ஊர்க்காவல்படை, டிஜிபி சிறைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரியும் அந்தந்த அதிகார வரம்புகளில் இதை அமல்படுத்துமாறு பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.