கோவையில் போதை தரும் மாத்திரைகளை சிரிஞ்ச் மூலம் உட்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு – ஒருவர் கைது..!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே போதை தரும் வலி மாத்திரைகளை உட்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் அஜய்குமார் என்ற மாணவர் BE இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நண்பர் அறையில் தங்கி இருந்த அஜய் குமாருக்கு கடந்த 13ந்தேதி உடல் நலம் பாதிக்கப்படவே சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது பஷீர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.