#தமிழகம் || காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை.!

கோவை : மேட்டுப்பாளையம் அடுத்த கூடுதுறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷினி (26 வயது) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில், பார்த்திபனுக்கு மதுபழக்கம் அதிகமானதால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவம் நடந்த ஆண்டும் சண்டை வந்துள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், பிரியதர்ஷினியை கன்னத்தில் அறைந்தார். இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த பிரியதர்ஷினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சமத்துவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.