கலைஞர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுக்கூற நடுக்கடலில் பேனா வடிவில் நினைவுச்சின்னம்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் நினைவுக்கூறும் வகையில் சென்னை மெரினாவின் நடுக்கடலில் 134 அடி உயர பேனா வடிவத்துடன் நினைவு சின்னம் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த நினைவு சின்னத்தை பார்க்க மக்கள் செல்வதற்காக கண்ணாடி தரையுடன் கூடிய நடைப்பாலம் அமைக்கப்படுகிறது. 650 மீட்டர் நீளமுள்ள இந்த இரும்பு பாலம் தரையில் 290 மீட்டரும், கடலில் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.