முன்விரோதத்தால் பெட்ரோல் குண்டு வீசிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துகுடி மாவட்டம், அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வகணேஷ். அந்த பகுதியில் இவர் மரவியாபாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் மகாகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், மகாகிருஷ்ணன் சிலரை வைத்து செல்வகணேஷ் வீட்டில் பெட்ரோல் வீசவைத்துள்ளார். இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அவர் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.