சேலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி கைது

சேலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த மற்றொரு பயங்கரவாதியை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கர்நாடக மாநிலம் திலக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து தகவல் தெரிவித்த நிலையில், சேலத்தில் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்த அப்துல் ஆலிம் முல்லா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், ஈரோட்டிலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தினர் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.