குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மெகபூப் நகரில் வசித்து வருபவர் ஜாபருல்லா. இவரது மகன் தன்வீர் சேக். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவரது நண்பர்களுடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.குளத்தின் ஆழமான பகுதிகு சென்ற அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்ற நிலையில், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பாம் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.