நாடு முழுவதும் காய்ச்சல், இதய பாதிப்புகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்..!

டெல்லி: நாடு முழுவதும் சந்தையில் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டலா பாதிப்புக்கு பயன்படுத்தும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. தரமற்ற மருந்துகளின் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான மருந்துகள் இமாச்சளப் பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடாரிக்கப்பட்டவை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.