கனடாவிற்கு மகளை ஆசை ஆசையாய் அனுப்பிவைத்த தந்தை! இறந்துவிட்டதாக வந்த செய்தி


கனடாவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் குராளியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் மகள் ஸ்வேதா.
பள்ளிப்படிப்பை முடித்த ஸ்வேதா கனடாவுக்கு மேற்படிப்பு படிக்க சென்றார். அங்குள்ள சரே நகரில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அங்கு கார் ஒன்று வேகமாக வந்து ஸ்வேதா மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

கனடாவிற்கு மகளை ஆசை ஆசையாய் அனுப்பிவைத்த தந்தை! இறந்துவிட்டதாக வந்த செய்தி | Student Of Kurali Dies In Accident Canada

இது தொடர்பாக சஞ்சீவ்குமார் கூறுகையில், படிப்பில் கெட்டிக்காரியாக ஸ்வேதா திகிழந்தார்.
வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பியதால் பல சிரமங்களுக்கு இடையே அவளை அனுப்பி வைத்தேன், அவள் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு வந்தது.

என் மகள் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.