விரைவில் தமிழகத்தில் 534 சிற்றூர்களில் பி எஸ் என் எல் 4 ஜி சேவை

டில்லி

விரைவில் தமிழகத்தில் 534 சிற்றூர்களில் பி எஸ் என் எல் 4 ஜி சேவை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி அலைப்பேசி சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்திருந்தது. இதனால் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி அலைப்பேசி சேவை அளிக்கப்பட உள்ளது

இதில் புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி அலைப்பேசி சேவை வழங்கப்பட உள்ளது.. மேலும் தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களில் இச்சேவை வழங்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.