Rishi Sunak: 'தோற்பது உறுதி.. இருந்தாலும் கடைசி வரை போராடுவேன்' – ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் தேர்தலில், தனது தோல்வி உறுதி என்றும், எனினும், கடைசி வரை போராடுவேன் என்றும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார்.

இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார். தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வரும் 4 ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பானது வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை நடந்து, 5 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் – வெல்லப்போவது யார் ?

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், “பிரிட்டன் பிரதமருக்கான தேர்தலில் தான் பின்தங்கி இருக்கிறேன் என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியும் என்றும், இருந்த போதிலும், இந்தப் பந்தயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், அனைவரின் ஆதரவையும் கேட்கிறேன் என்றும், உங்களுடைய ஒவ்வொரு வாக்குக்காக தான் போராடப் போவதாகவும்” தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.