ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளரான திரு.சமன் ரத்னப்பிரிய அவர்கள், ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-02

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.