காரைக்கால்: பள்ளி சென்று திரும்பிய சிறுவனை கடிக்கத் துரத்திய தெரு நாய்கள்

காரைக்காலில் பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்க வைத்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரு நாய்கள் அதிகளவு சுற்றித் திரிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தெரு நாய்களை அப்புறப்படுத்த நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
image
இந்நிலையில் திருபட்டினம் பெரிய மரக்கையார் வீதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை மூன்று நாய்கள் கடிக்க துரத்தியுள்ளது. அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டதால் சிறுவன் எந்தவித பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டான்.
image
இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.