காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான தானிஷிற்கு சிறைத் தண்டனை



அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட தானிஷ் அலி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தானிஷ் அலி சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  குற்றத்தை ஒப்புக்கொண்ட தானிஷ் அலி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டா கோகோம் ஆர்ப்பாட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்களால் ஒருவரான தானிஷ் அலி, டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தயாராக இருந்த போது குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.