காமன்வெல்த் பேட்மிண்டன் : ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு தகுதி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது. 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டாவை சேர்ந்த டேனியல் வனாகலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இலங்கையை சேர்ந்த துமிந்து அபேவிக்ரமாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-9, 21-12 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.