அமெரிக்காவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்  

அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக ,சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

அமெரிக்காவின் மாநிலங்களான கலிபோர்னியா, நிவ்யோர்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் குரங்கம்மை தொற்று விரைவாக பரவி வருகிறது.

குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.

“அமெரிக்கா மக்கள் குரங்கு அம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அவசர நிலை குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும்இ தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக “அமெரிக்கா சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.