சிலம்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய. மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி தாளாளர் செல்வின், பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் டென்னிசன் செய்திருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.