ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்..! – பீகார் அரசியலில் அதிரடி..!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். எதிர் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் நிதிஷ் குமார் கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.