எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து

நியூயார்க்:
நியூயார்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.