தமிழகத்தில் மேலும் ஒரு யானைகள் காப்பக பகுதி – மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நான்கு யானைகள் காப்பக பகுதிகள் உள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வகையில் நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.



 

நெல்லை அகத்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று உலக யானைகள் தினம் என்பதால், இதனையொட்டி இந்தியாவில் மேலும் ஒரு யானைகள் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகத்திய மலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.