தமிழகத்தில் நான்கு யானைகள் காப்பக பகுதிகள் உள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
I am very happy to share with you all that later today, India will witness the establishment of one more Elephant Reserve, Agasthiyamalai in Tamil Nadu, adding another 1,197 sq km of protected area dedicated to conservation of elephants.#WorldElephantDay2022 🐘 pic.twitter.com/4VSFeA3aJJ
— Bhupender Yadav (@byadavbjp) August 12, 2022
நெல்லை அகத்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று உலக யானைகள் தினம் என்பதால், இதனையொட்டி இந்தியாவில் மேலும் ஒரு யானைகள் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகத்திய மலை அறிவிக்கப்பட்டுள்ளது.