ஐரோப்பியாவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு..!

ஐரோப்பியாவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் கோர்சிகா ஆகிய இடங்களில் மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் வீடுகள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததோடு, சாலையோரமாக கடைகளில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் தூக்கி வீசப்பட்டன.

ஆஸ்திரியாவில் வீசிய பலத்த காற்றால் மரம் சாய்ந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த நிலையில், மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

இதனிடையே, பிரான்சின் தென்கிழக்கு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.