கடன் தொல்லையால் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிந்த உண்மை..!

கடன் தொல்லையால் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு வனிதா என்ற மனைவியும் 8 வயது மகனும் உள்ளனர். முருகன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும், முருகன் ஊர் முழுவதும் கடன் வாங்கி வந்துள்ளார். வீட்டை வைத்து கடன் வாங்கி உள்ளூரில் வாங்கிய கடனை கொடுத்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.

வீட்டிற்கு வந்த வனிதா அவரை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முருகனை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டதில் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஊர் முழுவதும் கடன் வாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணயில் தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.