இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல்


இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட தகவலில், அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்.

அடிக்கடி அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள்

தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல் | Price Increase In Srilanka

பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன. அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம்.

பிஸ்கட், சவர்க்காரம், சலவை தூள், நூடில்ஸ் (Instant Noodles), சோயா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன. அதிக விலைக் காரணமாக சில பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதன்காரணமாக அத்தியாவசிய பொருள் உள்ளிட்ட ஏனைய உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல் | Price Increase In Srilanka

பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

இதேவேளை எரிவாயு, சீமெந்து, இரும்பு உள்ளிட்ட ஏனைய சில பொருட்களின் விலைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. சந்தை விலை, செலவுகள் மற்றும் நுகர்வோருக்கு எரிவாயு வழங்கும் சில்லறை விலை என்பன குறித்து கவனம் செலுத்தி எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

இலங்கையில் சில பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள தகவல் | Price Increase In Srilanka

கடந்த காலங்களில் சீமெந்து, இரும்பு, டயர் மற்றும் பிஸ்கட் போன்ற உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நியாயமானதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்த பொருட்களின் விலை சூத்திரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் அறிக்கை ஒன்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.