சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

ஊட்டி,: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த வாரம் தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிவரும் கூலி தொழிலாளியின் மகளை (4) சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று அரக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. நேற்று இரவு உணவு தேடிவந்த அந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறை ஊழியர்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.