அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் அவருக்கு பதிலாக பேருந்தை ஓட்டிய நடத்துனர்.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் அவருக்கு பதிலாக நடத்துனர் பேருந்தை ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட தடம் எண் 212 என்ற பேருந்தை ஓட்டுனர் தரணியேந்திரன் இயக்கி வந்தார். அந்த பேருந்தில் 46 பயணிகள் இருந்த நிலையில் ஓட்டுனர் தரணியேந்திரன் குடிபோதையில் இருந்ததால் அவரால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து தடுமாற்றத்துடன் நடத்துனர் பேருந்தை இயக்கி வந்த நிலையில் வந்தவாசியில் அந்த பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.