திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 79 ஆயிரத்து 836 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 35 ஆயிரத்து 916 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.56 கோடியை காணிக்கையாக செலுத்தினர். நேற்று வந்த பக்தர்கள் 12 மணிநேரம், அதாவது அரை நாள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
