ரஜினி – நெல்சன் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சனிற்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதன் பிறகு விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கும் படம் நடக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. 

இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக இந்த படம் பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்து அதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டியில் ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

அதே போல இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த படப்பிடிப்புகள் வெளி மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.  ரஜினியை தவிர இந்த படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.